fiché S கண்காணிப்பில் இருந்த ஒருவர் கைது!
25 ஐப்பசி 2023 புதன் 07:00 | பார்வைகள் : 14348
நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களின் பெயர் பட்டியலில் (fiché S) உள்ள ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை காலை இக்கைது சம்பவம் Houilles ( Yvelines ) நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் காவல்துறையினரால் பின் தொடரப்பட்டு, வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்றபோதும், சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்டறிந்தபோது, அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவர் கைது செய்யப்பட்டதாகவும், 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan