பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் குவிந்த 15,000 பேர்!

22 ஐப்பசி 2023 ஞாயிறு 19:47 | பார்வைகள் : 11755
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தலைநகர் பரிசில் இன்று 15,000 பேர் வரை ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Place de la République சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹாசா நிலப்பரப்பில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலை நிறுத்தும் படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல்வேறு வாசகங்களை எழுதிய பதாகைகளும், பல பாலஸ்தீன கொடிகளையும் கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15,000 பேர் வரை இதில் பங்கேற்றதாகவும், வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025