Paristamil Navigation Paristamil advert login

Val-d'Oise : கத்திக்குத்தில் ஒருவர் பலி! - காவல்துறையினர் தீவிர விசாரணை!

Val-d'Oise : கத்திக்குத்தில் ஒருவர் பலி! - காவல்துறையினர் தீவிர விசாரணை!

22 ஐப்பசி 2023 ஞாயிறு 12:24 | பார்வைகள் : 12565


கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்ட நிலையில், 60 வயதுடைய ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Bezons (Val-d'Oise) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று சனிக்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நபரின் முன்னாள் மனைவி அவரது வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்துள்ளார்.

பின்னர் அவரே காவல்துறையினரை அழைத்துள்ளார்.

சடலத்தை மீட்ட காவல்துறையினர், அதனை உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.