காசாவுக்கு குடிநீர் வழங்க தயாராகும் இஸ்ரேல்

16 ஐப்பசி 2023 திங்கள் 08:23 | பார்வைகள் : 7940
இஸ்ரேயல் - காசா பகுதிகளில் போர் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 2,329 பலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளது.
9,714 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் திடீர் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025