இஸ்ரேல் மீது தாக்குதல் - பரிசில் ஒற்றுமைக்கான பேரணி!
8 ஐப்பசி 2023 ஞாயிறு 09:35 | பார்வைகள் : 14816
இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து, பரிசில் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை திங்கட்கிழமை மாலை இந்த பேரணி Place d'Italie (பரிஸ் 17 ஆம் வட்டாரம்) பகுதியில் இடம்பெற உள்ளது. யூத மக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்தும் இந்த ஒற்றுமைக்கான (de solidarité) பேரணி இடம்பெற உள்ளது.
பிரான்சில் உள்ள யூதர்களுக்கான அமைப்பான Conseil représentatif des institutions juives de France இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. மாலை 6.30 மணிக்கு இந்த பேரணி ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கு பரிஸ் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan