மூட்டைப்பூச்சிகளுக்கு முடிவு - அமைச்சர்களுடன் ஆலோசனை!
3 ஐப்பசி 2023 செவ்வாய் 17:11 | பார்வைகள் : 21512
பிரான்சில் தலைதூக்கியுள்ள மூட்டைப்பூச்சி தொல்லைக்கு முடிவு எட்டும் விதத்தில் அடுத்து வரும் சில நாட்களில் அமைச்சர்களுடன் முக்கிய சந்திப்பு ஒன்றை பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி நேரத்தில் இது தொடர்பாக சபாநாயகர் பிரதமரிடன் கேள்வி எழுப்பினார். “அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ளும் சந்திப்பு ஒன்று வரும் நாட்களில் இடம்பெற உள்ளது!” என பிரதமர் Elisabeth Borne பதிலளித்தார்.
Insoumis கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான Mathilde Panot, இந்த மூட்டைப்பூச்சி விவகாரம் தொடர்பில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அரசு அமைதி காப்பதாகவும் குற்றம் சாடினார்.
“மூட்டைப்பூச்சி தொடர்பாக கருத்துக்கள் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான். அதை தடுப்பதற்குரிய வழிமுறைகள் ஏற்கனவே ஆராயப்பட்டு வருகிறது!” எனவும் பிரதமர் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan