கனடாவில் கோர விபத்து 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
3 ஐப்பசி 2023 செவ்வாய் 08:19 | பார்வைகள் : 10008
கனடாவில் ஸ்வான் ஆற்றுப்பகுதியில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஐந்து பேர் வரை பலியாகியுள்ளனர்.
சஸ்கட்ச்வான் பிராந்தியத்தின் எல்லை பகுதியில் ஸ்வான் ஆற்றுக்கு 19 கிலோமீட்டர் தொலைவில் 83 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
வாகனம் குடைசாய்ந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வாகனம் பயணித்த காரணத்தினால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 42 மற்றும் 26 வயதுகளை உடைய இரண்டு பெண்களும், 37 36 மற்றும் 25 வயதுகளுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே இவர்கள் உயிரிழந்து விட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களை செலுத்தும் போது மிக அவதானமாக செலுத்த வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan