நகரசபைக் கட்டிடத்தை எரியூட்டிய பதினைந்து பேர் கைது!
30 புரட்டாசி 2023 சனி 14:54 | பார்வைகள் : 19916
Persan (Val-d'Oise) நகரசபைக் கட்டிடத்தை எரியூட்டிய பதினைந்து பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் மாத இறுதியில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட Nahel எனும் இளைஞனுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பலத்த வன்முறை வெடித்திருந்தது. குறிப்பாக பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் இரவுநேர வன்முறை கட்டுக்கடங்காத அளவு இடம்பெற்றிருந்தது. அதன் ஒரு பகுதியாக ஜூன் 30 ஆம் திகதி Persan (Val-d'Oise) நகரத்துக்குச் சொந்தமான நகரசபைக் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர்
கைது செய்யப்பட்டவர்களின் பெயர், வயது போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. மூன்று மாதங்களின் பின்னர் குற்றச்செயலில் ஈடுபட்ட 15 பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan