பயிற்சியில் ஈடுபட்டிருந்த - இராணுவ வீரர் பலி!

30 புரட்டாசி 2023 சனி 12:48 | பார்வைகள் : 11014
இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். Pamiers (Ariège) இராணுவ தளத்தில் கடமையாற்றும் வீரர் ஒருவரே பலியாகியுள்ளார்.
172 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய Nathanaël Bonnemere எனும் வீரரே பலியாகியுள்ளார். அவர் நேற்று வெள்ளிக்கிழமை Pujols (Lot-et-Garonne) நகரில் வைத்து பரசூட் (parachute) மூலம் குதித்து சாகசத்தில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவர் இதுவரை 239 தடவைகள் இதுபோன்ற சாகச நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில், நேற்றைய நாள் துரதிஷ்ட்டவசமாக அமைந்துள்ளது என அவரது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இராணுவத்தில் அவர் இராணுவ வீரர்களுக்கான தாதியாக பணிபுரிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு உள்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1