Paristamil Navigation Paristamil advert login

12 வயது சிறுவன் உட்பட மேலும் 11 பேர் மருத்துவமனையில் அனுமதி. அவர்கள் தங்கியிருந்த தங்கிமிடம் மீது வழக்குத் தாக்கல்.

12 வயது சிறுவன் உட்பட மேலும் 11 பேர் மருத்துவமனையில் அனுமதி. அவர்கள் தங்கியிருந்த தங்கிமிடம் மீது வழக்குத் தாக்கல்.

19 புரட்டாசி 2023 செவ்வாய் 19:46 | பார்வைகள் : 15523


12 வயது சிறுவன் உட்பட மேலும் 11 பேர் மருத்துவமனையில் அனுமதி. அவர்கள் தங்கியிருந்த தங்கிமிடம் மீது வழக்குத் தாக்கல்.

கடந்த 18ம் திகதிக்கும் 19ம் திகநிக்கும் இடைப்பட்ட இரவில் 12 வயதச் சிறுவன் உட்பட 11 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிறுவன் Villeneuve-Saint-Georges மருத்துவ மனையிலும், ஏனையவர்கள் பல்கலைக்கழக மருத்துவ மனையான Kremlin-Bicêtre மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சுவாசக் கோளாறால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலேயே மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.Val-de-Marne பகுதியில் இருக்கும் Ablon-sur-Seine விடுதியில் தங்கியிருந்தபோதே குறித்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

குறித்த விடுதியில் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிக்காத பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கப் பட்டதாலேயே குறித்த நபர்களுக்கு மிக மோசமான சுவாசக் கோளாறு ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித் விடுதிக்கு எதிராக Créteil அரச வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026