Paristamil Navigation Paristamil advert login

Pantin : பண மோசடி விளையாட்டில் ஈடுபட்ட எட்டு பேர் கைது!!

Pantin : பண மோசடி விளையாட்டில் ஈடுபட்ட எட்டு பேர் கைது!!

19 புரட்டாசி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 15541


de jeux clandestin என அழைக்கப்படும் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்ட எட்டு பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Pantin (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பணத்தை வைத்து விளையாடும் இந்த மோசடி விளையாட்டுக்களால் பலர் ஏமாற்றப்படு பணத்தை இழந்துள்ளனர். சீனாவில் புகழ்பெற்ற இந்த சூதாட்ட விளையாட்டுக்களுக்கு பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Pantin நகரில் இயங்கிய எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

47 தொடக்கம் 58 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நடாத்திய விளையாட்டு அரங்கு அகற்றப்பட்டு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் €54,960 யூரோக்கள் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்த சூதாட்ட குழுவினரால்  கடந்த சில ஆண்டுகளில் €73,000 யூரோக்கள் பணம் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026