யாழில் பேருந்தில் இருந்து இறங்கிய நபர் திடீர் மரணம்

15 புரட்டாசி 2023 வெள்ளி 12:00 | பார்வைகள் : 9278
யாழ்ப்பாணம் – நாவற்குழியில் பேருந்திலிருந்து இறங்கிய நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனை அபிவிருத்தி சபையில் கடமையாற்றும் மட்டுவிலை சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025