Paristamil Navigation Paristamil advert login

போப்பாண்டவருடன் எமானுவல் மக்ரோன் சந்திப்பு!!

போப்பாண்டவருடன் எமானுவல் மக்ரோன் சந்திப்பு!!

14 புரட்டாசி 2023 வியாழன் 17:44 | பார்வைகள் : 16526


போப்பாண்டவர் தனது மத்தியதரைக்கடற்பகுதிச் சந்திப்பான «Rencontres méditeranéennes»  இன் இறுதியில் எதிர்வரும் செப்டெம்பர் 22 மற்றும் 23ம் திகதிகளில் மார்செய் நகரிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

மார்செய் நகரின் வெலாத்ரோமில், போப்பாண்டவர் நடாத்தும் திருப்பலியில் பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கலந்து கொள்கின்றார்.

இதன் பின்னர் போப்பாண்டவருடன் உக்கைரன் யுத்தம், சர்வதேச குடியேற்றவாதிகள், இஸ்லாமியர்களுடனான உறவு மற்றும் பல சர்வதேச விடயங்கள் பற்றி எமானுவல் மக்ரோன் கலந்துரையாட உள்ளார்.

2017ம் ஆண்டிலிருந்து இவர்கள் இருவரும் அதிகாரபூர்வமாக  நான்காவது தடவையாக சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026