பரிஸ் : ஸ்கூட்டரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு

11 புரட்டாசி 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 15451
ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு பிரயோகம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள porte Dorée பகுதியில்இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்டஇரவு 2.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. வீதி சமிக்ஞைவிளக்கில் ஸ்கூட்டரில் காத்திருந்த நபரை நோக்கி, ஈருருளி ஒன்றில் வருகை தந்தநபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அதிஷ்ட்டவசமாக துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடையவில்லை.
அதேவேளை, வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் மிக துரிதமாகசெயற்பட்டு, ஆயுததாரியை பிடிக்க முயற்சி செய்தனர். ஆயுதாரி boulevard périphérique வழியாக தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025