2400 ஆண்டுகள் பழமையான கல்லறையில் 6 எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு!
11 தை 2017 புதன் 08:23 | பார்வைகள் : 18319
வட ஈராக்கில் சுமார் 2400 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றில் 6 எலும்பு கூடுகளும் அவற்றுக்கருகில் சில வெண்கலப் பொருட்களும் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த கல்லறை அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னன் அஜயிமெனித் பேரரசு காலத்தில் (கி.மு.550-330) கட்டப்பட்டிருக்கும் என ஈராக் நாட்டின் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பலநாட்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களின் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடு மிகவும் கலை பூர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.









திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan