ஏனடி பெண்ணே...!
19 சித்திரை 2013 வெள்ளி 06:39 | பார்வைகள் : 15674
ஏனடி பெண்ணே
உன் கால்கள் தடம் மாறுது
உன் ஜீவன் எப்போதுமே
என்னோடு உறவாடுது
(ஏனடி பெண்ணே ....)
முதல் பார்வை நீயும் தந்து
என் மனசில் வந்தாயே
முதல் பாவை நானும் கண்டு
உன் உயிரில் நனைந்தேனே
முதல் முத்தம் நீயும் தந்து
என் தேகம் படித்தாயே
முழு நிலவை நானும் கண்டு
பகல் பொழுதை மறந்தேனே
நிழலும் என் சொந்தம் என்றாய் அன்பே
நீயும் என் தெய்வம் என்றாய் நெஞ்சே
நீங்காத எண்ணங்கள் நீ ....
மாறாத காயங்கள் ஏனோ இன்று
(ஏனடி பெண்ணே ....)
என் இதயம் உனக்குள் என்று
நீ தானே சொன்னாயே
கண்ணாடி நெஞ்சம் என்று
கல் வீசி போகாதே
என் விழியின் உறக்கம் நீயே
இமையாலே சொன்னாயே
கடதாசி கப்பல் என்று
படியேற மறுக்காதே
நீயே என் தேசம் அன்பே அன்பே
நீயே என் சுவாசம் நெஞ்சே நெஞ்சே
விழி தேடும் என் காதல் நீ ....
விரல் சேர எனைக்காண வா அன்பே
( ஏனடி பெண்ணே )
கவிஞர்:த.தர்ஷன்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan