Paristamil Navigation Paristamil advert login

வலிகள் தந்தவன்....

வலிகள் தந்தவன்....

17 பங்குனி 2014 திங்கள் 17:01 | பார்வைகள் : 17032


வலிகள் தந்தவன்
அமைதியாய் வாழ்கின்றான்

மனதைக் கொடுத்தவள்
மரணத்தை நாடுகின்றாள்
 
காற்றினில் வந்தவன்
கண்ணாம் பூச்சி
ஆடுகின்றான்

பாட்டினில் கடிதம் அனுப்பி
வைத்தியம் செய்கிறான்

பாவம் பேதை என பொய்யாய்ப்
புகழ் பாடுகின்றான்

மறந்தது அவனுக்கு
உண்மையின் நியதி
கற்றிடுவான் நாளை
பெண் அவள் கொடுக்கும்
விலை அறிந்து......