உனை நீ உணர்ந்து வரும் வரை
28 வைகாசி 2012 திங்கள் 17:54 | பார்வைகள் : 16382
அன்பே என் ஆருயிரே
அடங்கிடுமோ என் ஆசை
அழியா சொத்தென்று
அனுதினமும் சொன்னாயே
அநாதையாய் நான் நிற்கிறேன்
அலட்சியம் செய்து நீ போவதேன் ?
இன்றியமையா துன்பத்திலும்
இறுதிவரை நீ என்றாய்
இன்று ஏன் இறுமாப்பு கொள்கிறாய்
இனியவள் நீ என்று
இதயத்தை இழந்தவன் நான் - நீ
இல்லை என்றால் என்னாகும் என் நிலை ?
உண்மையாய் உன்னை போற்றுகிறேன்
உன் உணர்வை மதிப்பதனால்
உன்னையே தினம் நினைத்து
உருகும் எனை ஏன் நினைக்க மறந்தாய்
உன் உணர்வை அழிப்பதாலா ?
உதறி விட்டு நீ போனாலும்
உலகில் நான் உள்ளவரை
உற்றவளாக உன்னை எண்ணி
உனக்காக காத்திருப்பேன்
உனை நீ உணர்ந்து வரும் வரை....
- சிந்து.எஸ்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan