சாபம்

11 ஆவணி 2012 சனி 18:22 | பார்வைகள் : 14711
இறைவனே!
இதயத்தை படைத்து
ஆசையை ஏன் படைத்தாய்?
பெண்னை படைத்து
ஆணை ஏன் படைத்தாய்?
இன்பத்தை ஊற்றி
வலியை ஏன் பெருக்கினாய்?
உறவுகளை பரப்பி
பாசத்தை ஏன் விதைத்தாய்?
பாசத்தை விதைத்து
பகையை ஏன் பெருக்கினாய்?
என்றும் ஊமையாய் நீ
வேதனையில் நாமெல்லவா?
இன்னொர் உலகம் பிறந்தால்,
கடவுளாய் நாமும்
மனிதனாய் நீயும்
பிறக்கக் கடவாய்....