Paristamil Navigation Paristamil advert login

கல்லறையில் ஓர் கனவு

 கல்லறையில் ஓர் கனவு

29 சித்திரை 2018 ஞாயிறு 14:12 | பார்வைகள் : 14481


அன்றைய விடியலில் 
தன கனவுகளை நோக்கி 
பயணமாகிக் கொண்டிருந்தாள் 
பாரதி கண்ட 
புதுமைப் பெண் 
ஆனால் அவள் 
கண்ட கனவுகள் 
நனவாகாமல் 
போனது தான் 
காலம் செய்த கொடுமை 
காரணம் 
அன்று அவள் 
ஈவிரக்கமே இல்லாத 
மனிதர்கள் என்ற 
வண்ணம் பூசிய 
மிருக இனங்களால் 
சூறையாடப்பட்டாள் ; 
வாழ்வில் 
சாதனைப் பெண்ணாக 
ஒளிர வேண்டியவள் 
அன்று 
தன் பெண்மையை இழந்தாள் 
தன் கனவுகளை இழந்தாள் 
இறுதியில் அவள் 
வாழ வேண்டிய 
வாழ்க்கையை இழந்து 
மண்ணோடு மண்ணாகி 
போனாள் 
ஆனாலும் 
அவள் கண்ட கனவுகள் 
இன்றும் வாழ்ந்து 
கொண்டிருக்கின்றது 
அவள் வாழும் 
கல்லறையில்............!

வர்த்தக‌ விளம்பரங்கள்