Paristamil Navigation Paristamil advert login

கடவுளே காப்பாற்று!

கடவுளே காப்பாற்று!

24 ஐப்பசி 2019 வியாழன் 16:26 | பார்வைகள் : 16699


வளர்ந்து உதிர்ந்த பூவொன்று - அவள்

வரும் வழியின்
வாசற்படிக்கு கீழே
விழுந்துகிடக்கிறது...!
 
மில்லிமீட்டர் கல் நுனியின்
மெல்லிய உரசலைகூட
தாங்கிக்கொள்ளும் சக்தியில்லை
தரையில் கிடக்குமந்த பூவுக்கு...!
அத்தனை மென்மை...
 
வாசற்படியை நோக்கி
வந்துகொண்டிருக்கிறாள் அவள்...!
இப்பூவை அவள் மிதித்துவிட்டால் என்னாவது...?
இடவலமென படபடக்கிறது என் மனது...!
 
கவனிக்காமலே வந்தவளின்
கால்களில் ஒன்று,
அப்பூவை பார்த்தே நகர்கிறது...!
 
அரைநொடி நேரத்திற்குள்
அந்த பூவின் தேகத்தை
அவள் மிதித்துவிடப்போகிறாள்...!
 
கடவுளே...!
காயமேதுமின்றி காப்பாற்று...!!
அவள் பாதங்களை...

 

எழுத்துரு விளம்பரங்கள்