என் பெயர்...!!
9 ஆவணி 2019 வெள்ளி 03:59 | பார்வைகள் : 14594
பால்நிலா ஒளியில்
பாதியே தெரிந்தது
பரிதாபமான அந்த முகம்...!
அருகில் அழைத்தேன்...!
எனக்காகவே காத்துநின்றவன்போல
அருகில் வந்தான் அவன்...!
வந்தவன் வரலாறை உளறினான்...!
வந்தவிதம் பிதற்றினான்...!!
கூடுதல் காரணம் கேட்காமல்
கூடவே கூட்டிச்சென்றான் நான்...!
நிழலைபோல பின்தொடர்ந்தான் அவன்...!
கவலைகளையும்,
உணவுகளையும் பகிர்ந்துகொண்டோம்...!
நல்லவன் என்ற அடையாளத்துடன் - என்
நம்பிக்கையானவனுமானான் அவன்...!
ஒருநாள்...
மழைவிட்ட மாலைநேரம் அது...
என் பின்னே வந்துகொண்டிருந்நான் அவன்...!
எதிர்பார்க்கவேயில்லை...!
எட்டியென் முகத்தில் பிடித்தான்...!
கத்திய என் மூச்சை தடுத்து,
கத்தியொன்றால் என் கழுத்தை அறுத்தான்...!
பாதி உயிருடன்
வீதியில் விழுந்தேன் நான்...!
கட்டுப்படாத நாக்கை அசைத்து
காரணம் கேட்டேன் அவனிடம்...!
சிரித்தான்...!!
"உன் பெயரென்ன..?"
இது என் இரண்டாவது கேள்வி...!
முகத்தில் அணிந்திருந்த
நல்லவன் என்ற முகமூடியை
கொஞ்சம் விலக்கிக்கொண்டு,
பதில் சொன்னான் அவன்...!
“என் பெயர் துரோகம்...”


























Bons Plans
Annuaire
Scan