வர்ணஜாலம்

3 ஐப்பசி 2021 ஞாயிறு 17:38 | பார்வைகள் : 14454
கிணற்றுக்குள்
நிறைந்த நீருக்குள்
விரிந்த வானம்
விண்ணில் விளையாடும்
கருமேகக் கூட்டங்கள்
குளிர்ந்த சூரியன்
கிணறு விளிம்பில்
காணும் மரக்கிளைகள்
எட்டிப் பார்த்தபோது
என் முகம்!
கிணற்று நீரில்
சிறுவன் போட்ட
சிறுகல் விழுந்துபோது
சூரியன் கருமேகங்கள்
வானம் மரக்கிளைகள்
என் முகம்தான்
நீர்த் துளிகளாக தெறித்தன!
சிறுகல் மூழ்கியபின்
அமைதியான நீரில்
மீண்டும் கிணற்றுக்குள்
நீருக்குள் வர்ணஜாலம் !
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025