புதுமை என்றும் புரியாதது..

18 மாசி 2023 சனி 09:35 | பார்வைகள் : 8774
ஒவ்வொரு நாளும் தரும் இன்பமும் துன்பமும்
இரண்டற கலந்து வந்து உணர்த்தும் அனுபவம் தான் வாழ்க்கை.
மலர்களின் மதிப்பு அது தரும் வாசனையில்…
மனிதனின் மதிப்பு அவன் பேசும் பேச்சினில்…
புதுமை என்றும் புரியாதது..
புரிந்தால் அது புதியதோர் வாழ்க்கை..
உலகில் கொடுக்க கொடுக்க குறையாத செல்வங்கள் அன்பும் அறிவும் தான்
அன்பால் மனதை வெல்வோம்.
அறிவால் உலகை வெல்வோம்.
வீழ்ந்துவிட்டான், இனி எழ மாட்டான் என்ற எண்ணத்தை எதிரிக்கு கொடுத்துவிடாதே..
இவன் எழுந்தா மிரட்டலாக வருவான் என்ற பயத்தை எதிரிக்கு கொடு.