ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம்

9 புரட்டாசி 2014 செவ்வாய் 08:19 | பார்வைகள் : 14412
ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம் எத்தனையோ கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம்.
கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை ´உறுத்துவது´ மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.
ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட மற்ற பகுதிகளை பார்க்கிறார்களாம்.
ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே தான் கண்களை ஓட விடுவார்களாம்.
அந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம்,ஆசை...? இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம்,பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான் கருதுகிறார்களாம்.
ஒரு அழகான, மார்பகங்களைக் கொண்ட பெண்ணுடன் பேசும்போது ஆண்கள் தடுமாறிப் போய் விடுகிறார்களாம். அவர்களையும் அறியாமல் அவர்களது கண்கள் அப்பெண்ணின் மார்பகத்தின் மீது மோதித் திரும்புமாம். அதைத் தவிர்க்க எவ்வளவுதான் அவர்கள் முயன்றாலும், கட்டுப்பாடு காக்க முயன்றாலும் கூட எப்படியாவது ´பார்த்து´ விடுகிறார்களாம்.
பெண்களின் மீது பாலியல் வன்முறை நடப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்களின் இந்த வக்ர பார்வையால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் மார்பகம் ஒரு கவர்ச்சிப் பகுதியாக ஆண்களால் பார்க்கப்பட்டாலும் கூட அது தாய்மையின் சின்னம் என்பதே உண்மை.
ஒரு பெண்ணுக்கு இயற்கை கொடுத்த சீதனம்தான் மார்பகம். அதை கவர்ச்சிப் பொருளாக ஆண்கள் ரசித்தாலும் கூட அதை காட்சிப் பொருளாக்கி களங்கப்படுத்தாத வரை சரிதான்...!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025