Paristamil Navigation Paristamil advert login

பளபளப்பான தலை முடிக்கு

பளபளப்பான தலை முடிக்கு

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 14787


 இன்றைய பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது. இதற்கு காரணம் தூசி, மனஅழுத்தம், டென்ஷன், உணவுமுறைகள் போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது. இதற்கு பயப்பட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றி வந்தாலே விரைவில் கூந்தல் உதிர்வை தடுத்து பளபளப்பான கூந்தலை பெறலாம். 

 
தேவையான பொருட்கள்: 
 
முட்டைகள் 
எலுமிச்சை சாறு 
 
தயாரிக்கும் முறை: 
 
* ஒரு முட்டையை கிண்ணத்தில் போட்டு அதனோடு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இந்த கலவை மென்மையாக மாறும் வரை அவைகளை நன்றாக கலக்கவும். 
 
பின் இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 15 நன்றாக மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் மிதமான ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசுங்கள். இதன் முடிவில் பளபளப்பான தலைமுடியை பெற்றிடுவீர்கள். 
 
* எலுமிச்சை சாறு பொடுகை தடுத்து தலைச்சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கும். முட்டை உங்கள் தலை முடி அமைப்பை பளபளவென மாற்றும். - இந்த முறையை வாரம் இருமுறை செய்து வர வேண்டும். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்