நிலவில் கால் வைத்த நாசாவின் மூத்த விஞ்ஞானி மரணம்!
8 தை 2018 திங்கள் 09:37 | பார்வைகள் : 15025
அமெரிக்காவின் மிகுந்த அனுபவமுள்ள விஞ்ஞானியும், நிலவில் கால் வைத்தவர்களில் ஒருவருமான ஜான் யங் என்பவர் திடீரென மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 87. ஜான் யங் மரணம் குறித்து கருத்து தெரிவித்த நாசாவின் தலைமை விஞ்ஞானி கூறுகையில் இந்த உலகமும், அமெரிக்காவும் இன்று ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானியை இழந்துவிட்டது. வானியல் துறையில் மூன்று தலைமுறைகளின் ஆசான இருந்தவர் ஜான் யங் என்று புகழாரம் சூட்டியுள்ளார்/
கடந்த 1965ஆம் ஆண்டு முதல் முறையாக விண்பயணம் செய்த ஜான் யங், நிலவில் முதன்முதலில் கால் வைத்த மூன்று நபர்களில் இவரும் ஒருவர். கடந்த 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஜான் யங், ஓய்வுக்கு பின்னரும் நாசா நிறுவனத்திற்கு பல்வேறு ஆலோசனைகளை தந்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire