செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பவிருக்கும் ஆய்வுக் கலத்தின் இறுதிக்கட்டப் பணி ஆரம்பம்!

1 தை 2020 புதன் 09:17 | பார்வைகள் : 13535
NASA எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பவிருக்கும் Mars 2020 Rover ஆய்வுக் கலத்தில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனைக் காண ஊடகத் துறையினருக்கு ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆயத்தப் பணிகள் குறித்தும், திட்ட மேம்பாடுகளைப் பற்றியும் Mars 2020 குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.
விண்வெளியில் பாய்ச்சப்படும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களை ஆய்வுக் கலத்தினால் சமாளிக்க முடியுமா என்று சோதனைகள் நடத்தப்படுகின்றன.
செவ்வாய்க் கிரகத்திலிருந்து கற்களையும் மண்ணையும் சேகரிக்கும் வகையில் ஆய்வுக் கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்களும் மண்ணும் எப்படியாவது பூமியை வந்தடையும் என்பது நம்பிக்கை.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ஆய்வுக் கலம் விண்ணில் பாய்ச்சப்படும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025