மாரடைப்பு ஏற்படுவது எப்படி?
1 ஆடி 2026 புதன் 12:32 | பார்வைகள் : 179
இதயத்திற்கு ரத்தம் வழங்கும் ரத்த நாளங்கள் அடைபடும்போதோ அல்லது ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோதோதான் மாரடைப்பு ஏற்படுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது இதயத் தசைக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் இது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். முன்பு முதியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இந்தப் பிரச்சனை, தற்போது இளைஞர்கள் மத்தியிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் இறப்புகளுக்கு இதய நோயே முதன்மைக் காரணமாக உள்ளது. இருப்பினும், மாரடைப்பு திடீரென ஏற்பட்டாலும், பல நாட்களுக்கு முன்பே உடல் எச்சரிக்கை அறிகுறிகளைக் காட்டக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த அறிகுறிகளைச் சரியாகக் கண்டறிந்தால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று ஆபத்தைத் தவிர்க்க முடியும்.
இதுதொடர்பாக மருத்துவர் ராஜீவ் சிக்தார், தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்த ஒரு காணொளியில், மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பான முக்கிய அறிகுறிகளில் ஒன்று நடப்பதில் சிரமம் என்று கூறியுள்ளார். அதாவது சாதாரணமாக 10-15 நிமிடங்கள் சோர்வின்றி நடக்கும் ஒருவருக்கு, திடீரென படிக்கட்டுகளில் ஏறும் போது மூச்சுத்திணறல், கால்களில் பலவீனம் மற்றும் அதீத சோர்வு ஏற்பட்டால், அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அடுத்தபடியும் நெஞ்சு வலி என்பது மாரடைப்பின் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிகுறியாகும். இருப்பினும், எல்லோரும் ஒரே மாதிரியான வலியை உணர்வதில்லை. சிலர் நெஞ்சின் நடுப்பகுதியில் ஒரு கனமான உணர்வை உணரலாம், மற்றவர்கள் லேசான இறுக்கம் அல்லது அழுத்தத்தை உணரலாம். சில நேரங்களில், நெஞ்சில் மட்டுமல்லாமல் தொப்புளுக்கு மேலே உள்ள பகுதியிலும் வலி ஏற்படலாம். இதுபோன்ற வலி மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்க பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 15 முக்கியமான விஷயங்கள்.!
மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறி மார்பு வலி. ஆனால், இந்த வலி அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் மார்பில் ஒருவித பாரத்தை உணரலாம், மற்றவர்கள் இறுக்குவது போன்ற உணர்வை உணரலாம். சில சமயங்களில், தொப்புளுக்கு மேலேயும் இந்த வலியை உணர முடியும். உங்களுக்கு மீண்டும் மீண்டும் மார்பு வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மூச்சுத்திணறலும் மாரடைப்பின் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் சோர்வு ஆகியவற்றை அலட்சியம் செய்யக்கூடாது. இதயம் சரியாகச் செயல்படவில்லை என்றால், நுரையீரல்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இது சுவாசப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், மருத்துவரை அணுகவும்.
இதேபோல மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு உடல் காட்டும் முக்கிய அறிகுறிகளில் ஒன்று, எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் திடீரென ஏற்படும் அதிகப்படியான வியர்வை ஆகும். நீங்கள் நள்ளிரவில் திடீரென விழிக்கும்போது வியர்த்தாலோ, அல்லது சிறிதளவு உடற்பயிற்சி செய்த பிறகும் அதிகமாக வியர்த்தாலோ, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடுமையான சோர்வு, பலவீனம் அல்லது அசௌகரியத்தை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள், ஆண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளிலிருந்து சற்றே வேறுபடுகின்றன. நெஞ்சு வலியுடன், வயிற்று அசௌகரியம், குமட்டல், அஜீரணம், முதுகு/தோள்பட்டை வலி, மற்றும் கழுத்து அல்லது தாடை வரை பரவும் வலி போன்றவையும் ஏற்படலாம். பல பெண்கள் இந்த அறிகுறிகள் இயல்பானவை என்று கருதி அவற்றைப் புறக்கணிக்கின்றனர்.
ஆனால், இவை இதயப் பிரச்சனைகளுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, உங்கள் உடலில் ஏதேனும் மாற்றங்களைக் கண்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஆரம்பக்கட்ட சிகிச்சை பல ஆபத்துகளைத் தடுக்க ஒருவேளை அவை மாரடைப்புக்கான அறிகுறிகள் இல்லையென்றாலும்கூட, வேறு ஏதேனும் இதயப் பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே உதாசீனப்படுத்தாமல் மருத்துவரை அணுகிவிடுங்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan