மருத்துவமனைகளுக்கான குளிரூட்டிகள் இந்த வார இறுதியில் வழங்கப்படும் — செபஸ்தியோன் லூகோர்னு
29 ஆனி 2026 திங்கள் 20:57 | பார்வைகள் : 279
பிரான்சில் நீடித்து வரும் அதி உச்ச வெப்ப அலை காரணமாக மருத்துவமனைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ள நிலையில், பிரதமர் செபஸ்தியோன் லூகோர்னு ,
வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட 30,000 குளிரூட்டிகள் கொண்ட அரசின் பெரிய கொள்வனவில்முதல் தொகுதி குளிரூட்டிகள், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்
புதிய இடைமுக அமைச்சக நெருக்கடி குழுவை அறிமுகப்படுத்தியபோது,
“இது எங்களுக்கு முழுமையான முன்னுரிமை”
“முதல் ஆயிரக்கணக்கான குளிரூட்டிகள் இந்த வார இறுதியில், அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்பட ஆரம்பிக்கும்”
“அதி உச்ச வெப்ப அலை மீண்டும் அதிகரித்தால், மருத்துவமனைகளின் நிலை மிகவும் மென்மையாகவும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும் — இது எங்களின் முழுமையான முன்னுரிமை.”
எனத் தனது அறிக்கையில் பிரதமர் லூகோர்னூ தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan