Paristamil Navigation Paristamil advert login

ஜூன் 18 முதல் பிரான்சில் 74 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு — அதி உச்ச வெப்ப அலைக்கான நேரடி விளைவு!!

ஜூன் 18 முதல் பிரான்சில் 74 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு — அதி உச்ச வெப்ப அலைக்கான நேரடி விளைவு!!

27 ஆனி 2026 சனி 20:40 | பார்வைகள் : 247


உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ்(Laurent Nuñez),  அளித்த செவ்வியில்,
ஜூன் 18 முதல் பிரான்சில் 74 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்கள் அனைத்தும் தற்போது நாட்டை தாக்கும் அதி உச்ச வெப்ப அலையுடன் தொடர்புடையவை.

எங்கு இந்த மூழ்கி மரணங்கள் நடந்துள்ளன?

அமைச்சர் விளக்க்கத்தின்படி,

பெரும்பாலான மரணங்கள் அனுமதி இல்லாத, கண்காணிப்பு இல்லாத நீர்நிலைகளில்,

ஆறுகளில்

நதிகளில்

ஏரிகளில்

குளங்களில்

மேலும் தனியார் நீச்சல் குளங்களிலும் சில மரணங்கள் ஏற்பட்டுள்ளன.


மரணங்களுக்கு காரணமான முக்கிய அபாயங்கள்

அமைச்சர் விளக்க்கத்தின்படி,

திடீர் குளிர்ச்சியால் உடல் அதிர்ச்சி (Hydrocution)

அதிக உடல் உழைப்பு / அதிக செயல்பாடு

இதய நோய் தாக்கம் , பல மரணங்களில் இது கண்டறியப்பட்டுள்ளது

அதி உச்ச வெப்ப அலை காரணமாக:

உடல் வெப்பம் அதிகரிப்பது,

நீரிழப்பு,

திடீரென குளிர்ந்த நீரில் இறங்குவது,

இவை அனைத்தும் மூழ்கி மரண அபாயத்தை அதிகரிக்கின்றன என எச்சரிக்கப்பட்டுள்ளது.