Paristamil Navigation Paristamil advert login

பெண்ணின் மௌனம் காதல் கதையின் இறுதி அடையாளம்...?

பெண்ணின் மௌனம் காதல் கதையின் இறுதி அடையாளம்...?

26 ஆனி 2026 வெள்ளி 13:44 | பார்வைகள் : 158


ஒரு பெண் உங்களிடம் சண்டை போடுகிறாள் என்றால்…  சிறிய விஷயத்திற்குக்கூட கண்கலங்குகிறாள் என்றால்…"நீ ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று மீண்டும் மீண்டும் கேட்கிறாள் என்றால்… நினைவில் கொள்ளுங்கள்…அவள் இன்னும் உங்களை ஆழமாக நேசிக்கிறாள் என்பதற்கான அடையாளம் அதுதான்.அவள் சண்டை போடுவது… உங்களை இழந்துவிடுவோமோ என்ற பயத்தால். அவள் கண்ணீர் விடுவது… தன் வலியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஏக்கத்தால். அவள் கேள்விகள் கேட்பது… உறவு இன்னும் உயிருடன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையால். ஆனால்…

ஒருநாள் அந்தக் கேள்விகள் நின்றுவிட்டால்… அந்தக் கண்ணீர் வற்றிவிட்டால்… அந்தச் சண்டைகளும் மறைந்துவிட்டால்… நீங்கள் எவ்வளவு தவறு செய்தாலும், அவள் அமைதியாகச் சிரித்தபடி விலகிச் சென்றால்… "அவள் மாறிவிட்டாள்" என்று நினைக்காதீர்கள். அவள் மௌனமானது… உங்களை மனதிலிருந்து முற்றிலும் விடுவித்துவிட்டதால்தான்.

ஒருகாலத்தில் அவள் இதயத்தை நிரப்பிய காதலும்… நம்பிக்கையும்… எதிர்பார்ப்புகளும்… ஆழமான ஏமாற்றத்தின் சாம்பலாக மாறிய நாளில், ஒரு பெண்… உயிருடன் வாழ்ந்தாலும், உணர்வுகள் இல்லாத மனதுடன் மௌனமாகிவிடுகிறாள். ஒரு ஆணின் மௌனம் ஒரு பெண்ணின் இதயத்தை ஆழமாகக் காயப்படுத்தலாம்… ஆனால்… ஒரு பெண்ணின் மௌனம்…அந்தக் காதல் கதையின் இறுதி அத்தியாயத்தை எழுதிவிடுகிறது.