Paristamil Navigation Paristamil advert login

காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம் - ஆதவ் அர்ஜுனா

காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம் -  ஆதவ் அர்ஜுனா

22 ஆனி 2026 திங்கள் 11:20 | பார்வைகள் : 129


குடிநீருக்காக புதிய அணையை கட்டினால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆதவ் அர்ஜுனா கூறினார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக திருத்தம் செய்ததை அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

திருத்தம் கொண்டுவந்ததற்கான காரணம் குறித்து சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது; .நம்பிக்கையை இழந்துவிட்டோம்..”குடிநீர் பங்கீடுக்காக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

குடிநீர் தேவைக்காக என்று சொல்லி புதிய அணையை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது. குடிநீருக்காக புதிய அணையை கட்டினால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேகதாது அணையை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கொடுக்கச்சொல்லி கர்நாடக அரசுக்கு ஆதரவாக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம்..புதிய நடுவர் மன்றம்சட்ட வல்லுநகள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோருகிறோம். குடிநீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. அணை கட்ட வேண்டும் என்றால் புதிய நடுவர் மன்றம் தேவை.

கர்நாடக அரசின் வியூகத்துக்கு எதிராக தமிழக அரசின் வியூகமே புதிய நடுவர் மன்றம். புதிய நடுவர் மன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தால் நமக்கு போதிய கால அவகாசம் கிடக்கும்.”இவ்வாறு அவர் கூறினார்.