Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

21 ஆனி 2026 ஞாயிறு 15:14 | பார்வைகள் : 324


ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சமாதான முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்கா கட்டணம் விதிப்பது குறித்து பரிசீலிக்கக்கூடும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில்,

மேலும்,அமெரிக்கா வேறுவிதமாக முடிவு செய்யாத வரையில், 60 நாள் இடைக்காலப் போர்நிறுத்தக் காலத்தின்போதோ அல்லது அதற்குப் பின்னரோ, இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்வதற்கு எந்தச் சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்படாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் அமெரிக்கா விதிக்கும் எந்தவொரு கட்டணமும், இப்பகுதியைப் பாதுகாப்பதில் வோஷிங்டன் ஆற்றிய பங்கைச் சார்ந்தே இருக்கும் என்றும் அவர் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.