Paristamil Navigation Paristamil advert login

கடும் புயல் அபாயம்: 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை !!

கடும் புயல் அபாயம்: 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை !!

16 ஆடி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 300


கடுமையான இடியுடன் கூடிய புயல் அபாயம் காரணமாக இன்று ஜூலை மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் 15  மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு நிறுவனமான Météo-France அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்ப அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் தீவிரமான வானிலை மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Météo-France வெளியிட்ட வானிலை அறிவிப்பின் படி, இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை நிலை Berry பகுதியிலிருந்து Franche-Comté பகுதி வரை பரவியுள்ளது. குறிப்பாக Indre, Cher மற்றும் தெற்கு Alsace பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் புயல் நிலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த இடியுடன் கூடிய புயல்களின் போது பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை, பலத்த மழைப்பொழிவு, வேகமான காற்று மற்றும் தீவிர மின்னல் செயல்பாடுகள் பதிவாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செம்மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் உள்ள மாவட்டங்களாக Indre, Cher, Allier, Puy-de-Dôme, Loire, Rhône, Ain, Nièvre, Côte d'Or, Saône-et-Loire, Jura, Doubs, Haute-Saône, Territoire de Belfort மற்றும் Haut-Rhin ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.