Paristamil Navigation Paristamil advert login

பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்! தொடரும் மோதல்

பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்! தொடரும் மோதல்

14 ஆடி 2026 செவ்வாய் 12:13 | பார்வைகள் : 131


பயிற்சியின் போது விராட் கோலி மற்றும் கம்பீர் பேசிக்கொள்வதை தவிர்த்துள்ளனர்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 T20 மற்றும் 3 ODI போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது.

கடைசியாக ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கோலி, தொடை தசைநார் காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடவில்லை.

இன்று பர்மிங்காமில் நடைபெற உள்ள முதல் ODI போட்டியில் களமிறங்க உள்ள விராட் கோலி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஆனால், விராட் கோலி மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இடையே தற்போதும் சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி அமர்வில் கோலியும், கம்பீரும் பேசுவதை தவிர்த்துள்ளனர்.

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோருடன் உரையாடிய கம்பீர் விராட் கோலியுடன் பேசவில்லை.

இதே போல், துடுப்பாட்ட பயிற்சியாளரான சிதான்ஷு கோடக், கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாகப் பேசியுள்ளார்.

விராட் கோலி மற்றும் கம்பீர் இடையே நீண்டகாலமாக சுமூகமான உறவு இல்லை. ஐபிஎல் போட்டியின் போது நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

நியூசிலாந்து தொடரின் போது கூட இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். ஆனால் எந்த மோதலும் இல்லை என பிசிசிஐ விளக்கம் அளித்தது.

2027 உலக கிண்ணத்தில் எந்த வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விராட் கோலியுடன் விவாதித்ததாக ஷுப்மன் கில் தெரிவித்தார்.

இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீதான விமர்சனமும் அதிகரித்து வருகிறது.

இந்த போட்டி வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக்கிண்ண தயாரிப்புகளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், கம்பீருக்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற மூத்த வீரர்கள் அணிக்குத் திரும்பிய போதிலும், சிறப்பாகச் செயல்படத் தவறினால், கம்பீர் தலைமையிலான நிர்வாகம் மேலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும்.