Paristamil Navigation Paristamil advert login

ஆர்யா மீது ரூ.1.80 கோடி மோசடி வழக்கு!

ஆர்யா மீது ரூ.1.80 கோடி மோசடி வழக்கு!

13 ஆடி 2026 திங்கள் 12:05 | பார்வைகள் : 129


தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஆர்யா. கடத்த ஜூன் 25ம் தேதி அவரின் நடிப்பில் அனந்தன் காடு என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஜியேன்  கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஒருவராக ஆர்யாவும் இருந்தார்.

இந்நிலையில்தான் ஆர்யா மீது ஹைதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனந்தன் காடு தயாரிப்பாளர் வினோத் மற்றும் ஆர்யாவின் உதவியாளர் கிஷோர் மீது ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2025ம் வருடம் தாஹோர் சினி டெக்னிக் நிறுவனத்திடம் அனந்தன் காடு படப்பிடிப்புக்கான அதிக நவீன உபகரணங்களை ரூ.2.12 கோடிக்கு வாடகைக்கு எடுத்த நிலையில் அதில் 1.80 கோடி தரவில்லை என புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மீதிப் பணத்தை கேட்க சென்ற தாஹோர் டெக்னிக் கணக்காளர் ஜாவித் அலியை மிரட்டியதாகவும் மூவர் மீதும் வழக்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் வெளியான அனந்தன் காடு திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.