Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

இலங்கையில் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

11 ஆடி 2026 சனி 15:10 | பார்வைகள் : 230


வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதுடன், பகல் வேளையில் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை' மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையைப் பிரதிபலிக்கும் வெப்பச் சுட்டெண், இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அளவுகளுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் போதியளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்குமாறும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடியாக சூரிய ஒளியில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் மற்றும் நாளின் அதிக வெப்பமான நேரத்தில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.