Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து - 17 பேர் பலி

பாகிஸ்தானில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து - 17 பேர் பலி

25 வைகாசி 2026 திங்கள் 17:28 | பார்வைகள் : 190


பாகிஸ்தானில் இன்று திங்கட்கிழமை 25.05.2026 இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மர்தான் மாவட்டத்தில் இரண்டு பஸ்கள் இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பஸ் ஒன்று வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்தபோது, அவ்வீதி வழியாக வேகமாக பயணித்துக்கொண்டிருந்த மற்றொரு பஸ் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் பின்புறம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த 17 பேரே உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.