வயலில் கண்டுபிடிக்கப்பட்ட 1700 ஆண்டுகள் பழமையான ரோம பொற்காசுகள்
25 வைகாசி 2026 திங்கள் 17:22 | பார்வைகள் : 184
லக்சம்பர்க் நாட்டின் வடபகுதியில் உள்ள Holzthum கிராமம் அருகே சமீபத்தில் நடந்த அகழாய்வில், 141 ரோம பொற்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 1,700 ஆண்டுகள் பழமையான இந்தக் காசுகள், ரோமப் பேரரசின் இறுதி காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையும் பாதுகாப்பு சவால்களையும் வெளிப்படுத்துகின்றன.
இந்தக் காசுகள் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 5-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை.
பல்வேரு பேரரசுகளின் முகப்புகள் பொறிக்கப்பட்டுள்ளதால், அக்காலத்தில் ஆட்சியாளர்கள் அடிக்கடி மாறியதை இது காட்டுகிறது.
குறிப்பாக, Eugenius என்ற குறுகிய காலம் ஆட்சி செய்த பேரரசின் காசுகள் மிகவும் அரிதானவை என்பதால், இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த பொற்காசுகள், ரோமப் பேரரசின் வட எல்லைப் பகுதிகளில் இருந்த பாதுகாப்புக் கோபுரம் அருகே புதைக்கப்பட்டிருந்தன. அங்கு இராணுவக் கண்காணிப்பு, வணிகப் பாதைகள் மற்றும் குடியிருப்புகள் இருந்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பு 2019-ஆம் ஆண்டு ஒரு பொற்காசு சிதைத்த நிலையில் கிடைத்ததன் மூலம் தொடங்கியது. பின்னர் அதிகாரப்பூர்வ அகழாய்வு நடத்தப்பட்டதில் முழு பொக்கிஷமும் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தக் காசுகளின் பொருளாதார மதிப்பு பல லட்சம் யூரோக்களாக இருந்தாலும், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் அதைவிட அதிகம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
ரோமப் பேரரசின் வீழ்ச்சி காலத்தில் மக்கள் தங்கள் செல்வத்தை பாதுகாப்பதற்காக புதைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, ஐரோப்பாவின் வரலாற்றை புதிய கோணத்தில் புரிந்துகொள்ள உதவுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan