Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பயணப்பொதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கையில் பயணப்பொதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

21 வைகாசி 2026 வியாழன் 18:04 | பார்வைகள் : 130


சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் பயணப்பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சீதுவை, முக்கலங்கமுவ, பியசமர பகுதியைச் சேர்ந்த 79 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நேற்று (20) சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, வீட்டின் அறையொன்றில் இருந்த பயணப்பொதிக்குள் இருந்து மூதாட்டியின் சடலம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​வீட்டின் பராமரிப்பு பணிக்காக வந்திருந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் போதைப்பொருளுக்கு பலத்த அடிமையானவர் என தெரியவந்துள்ளதுடன், மூதாட்டியிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கோடே இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதன் பின்னரே சடலம் பயணப்பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா மற்றும் அரசாங்க சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து ஆரம்பகட்ட மற்றும் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.