Paristamil Navigation Paristamil advert login

உலகளாவிய உணவு விலை நெருக்கடி ஏற்படும் - FAO அமைப்பு சிவப்பு எச்சரிக்கை

உலகளாவிய உணவு விலை நெருக்கடி ஏற்படும் -  FAO அமைப்பு சிவப்பு எச்சரிக்கை

21 வைகாசி 2026 வியாழன் 11:50 | பார்வைகள் : 107


ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலகளாவிய வேளாண்-உணவு அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இது அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் உலகளவில் கடுமையான உணவு விலை நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது.

இத்தகைய பேரழிவுச் சூழ்நிலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வேகமாக குறைந்து வருகிறது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

ஹோர்முஸ் நீரிணை, உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தக விநியோகச் சங்கிலியில் ஒரு முக்கியமான கடல்வழிப் பாதையாகும்.

இதன் விளைவாக, வரும் மாதங்களில் உலகச் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள், சாதாரண மக்கள் தாங்க முடியாத அளவிற்கு உயரும் என்று கூறப்படுகிறது.

இதனால் ஏற்படக்கூடிய கடுமையான பொருளாதார மற்றும் சமூகச் சரிவைத் தடுக்க, உலக வல்லரசுகளும் சர்வதேச அமைப்புகளும் உடனடியாகத் தலையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று FAO மேலும் வலியுறுத்துகிறது.