Paristamil Navigation Paristamil advert login

கருத்துக்கணிப்பு - சட்டவிரோத நிலையில் இருந்தால் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும்!

கருத்துக்கணிப்பு -  சட்டவிரோத நிலையில் இருந்தால் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும்!

21 வைகாசி 2026 வியாழன் 11:06 | பார்வைகள் : 168


CNEWS, Europe 1 மற்றும் JDD‑க்காக CSA நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி,
73% பிரெஞ்சு மக்கள்,ஒரு ஜோடியில் ஒருவர் சட்டவிரோத நிலையில் உள்ள வெளிநாட்டவர் என்றால் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன் இதே கேள்வியில் ஆதரவு 75% இருந்தது.

Béziers நகர முதல்வர் ரொபேர் மெனார் (Robert Ménard) வழக்கு காரணமாக விவாதம் மீண்டும் எழுகின்றது.

2023‑ல், Béziers நகர முதல்வர் Robert Ménard, ஒரு பிரெஞ்சு பெண்ணையும், நாட்டை விட்டு வெளியேறும் படியான ஆணையானக்கு   OQTF (Obligation de quitter le territoire français) உட்பட்ட ஒரு அல்ஜீரியரையும், திருமணம் செய்ய மறுத்ததால் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்பட்டார்.

இந்த வழக்கு 30 செப்டம்பர் அன்று மொன்பெலியே நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்படும்.

கருத்துக்கணிப்பில்,

வயது, பாலினம், சமூக நிலை — ஆதரவு எப்படி மாறுகிறது?

பாலினம்

ஆண்கள் : 75% ஆதரவு

பெண்கள் : 72% ஆதரவு

வயது

18–24 வயது : 63%

35–49 வயது : 70%

65 வயதுக்கு மேல் : 82% (அதிக ஆதரவு)

அரசியல் நோக்கில் — வலதுசாரியில் மிகுந்த ஆதரவு

இடதுசாரி
Écologistes : 35%

Parti socialiste : 50%

La France insoumise : 47%

வலதுசாரி
Rassemblement national / Reconquête : 90% (கிட்டத்தட்ட ஒருமித்த ஆதரவு)

Les Républicains : 82%

Renaissance (அரசு கட்சி) : 82%