துருக்கியில் மனைவி உட்பட 6 பேர் சுட்டுக் கொன்ற இளைஞன்
19 வைகாசி 2026 செவ்வாய் 18:36 | பார்வைகள் : 134
துருக்கியின் தெற்குப் பிராந்தியத்தில் உள்ள மெர்சின் மாகாணத்தின் தர்சூஸ் நகரில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் அடுத்தடுத்து நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய 37 வயதுடைய சந்தேகநபரை, ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உதவியுடன் பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சந்தேகநபர் முதலில் தர்சூஸ் நகரின் வீதியொன்றில் வைத்துத் தனது மனைவியைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
பின்னர் தனது காரில் தப்பியோடிய அவர், வழியிலிருந்த உணவகம் ஒன்றின் மீது காரிலிருந்தவாறே சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில் உணவகத்தின் உரிமையாளரும், அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதன் பின்னரும் அடங்காத கொலையாளி, மற்றொரு அக்கம் பக்கத்து குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த ஒரு பதின்ம வயது சிறுவன், 50 வயது மதிக்கத்தக்க முதியவர் உட்பட மேலும் மூவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan