Paristamil Navigation Paristamil advert login

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

18 வைகாசி 2026 திங்கள் 12:47 | பார்வைகள் : 220


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை இடம்பெற்று இன்றுடன்  17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கின் பல பிரதேசங்களிலும் வெளிமாவட்டங்களில் சில இடங்களிலும் நினைவேந்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பரிமாறல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.