Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?

அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?

18 வைகாசி 2026 திங்கள் 13:50 | பார்வைகள் : 115


முதல்வர் விஜய்க்கு தெரியாமல் லீமாரோஸ் எம்.எல்.ஏ., அளித்த வாக்குறுதியால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம் அணியினர், ஆட்சியில் பங்கு எதிர்பார்க்கின்றனர்; ஏழு அமைச்சர்கள், ஆறு வாரிய தலைவர் பதவிகளை கேட்கின்றனர். நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்பே அமைச்சரவையில் இடம் தருவதாக, லால்குடி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியுமான லீமாரோஸ் வாக்குறுதி அளித்ததாக, அ.தி.மு.க.,வினர் விஜய்க்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

இதை கேட்டு முதல்வர் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், அமைச்சரவை விரிவாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. லீமாரோஸ் அளித்த வாக்குறுதி தான், இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.