Paristamil Navigation Paristamil advert login

Gare du Nord பகுதியில் டக்சி மற்றும் VTC நெரிசல் அதிகரிப்பு: அவசர சேவைகளுக்கு சிரமம்!!

Gare du Nord பகுதியில் டக்சி மற்றும் VTC நெரிசல் அதிகரிப்பு: அவசர சேவைகளுக்கு சிரமம்!!

17 வைகாசி 2026 ஞாயிறு 21:26 | பார்வைகள் : 271


பரிஸில் உள்ள Gare du Nord தொடருந்து  நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டக்சி மற்றும் VTC வாகனங்களின் அதிக நெரிசல் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பலமுறை சாலை அமைப்புகள் மாற்றப்பட்டிருந்தாலும், போக்குவரத்து நெரிசல், இடையறாத ஹார்ன் சத்தம் மற்றும் சட்டவிரோத நிறுத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Rue de Compiègne மற்றும் Boulevard Magenta பகுதிகளில் போக்குவரத்து மிகவும் மோசமாக இருப்பதாக குடியிருப்போர் தெரிவிக்கின்றனர். அவசர உதவி வாகனங்களுக்குக் கூட Hôpital Lariboisière மருத்துவமனைக்குச் செல்ல சிரமம் ஏற்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர். 

பயணிகளை இறக்குவதற்காக பரிஸ் மாநகராட்சி நிலத்தடியில் இலவச நிறுத்துமிடத்தை அமைத்திருந்தாலும், பல டிரைவர்கள் மேல்தளத்திலேயே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து மேலும் சிக்கலாகிறது. இதனால், காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சிலர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில், பரிஸ் நகராட்சி, SNCF மற்றும் RATP ஆகியவற்றுடன் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், 2029 வரை Gare du Nord பகுதியில் கூடுதல் பணிகள் நடைபெற உள்ளதால், அப்பகுதியின் போக்குவரத்து நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.