பரிசில் ஆடம்பர கார் கொள்ளை : 17 வாகனங்கள் திருட்டு!!
17 வைகாசி 2026 ஞாயிறு 15:46 | பார்வைகள் : 188
பரிசின் 15வது வட்டாரத்தில் உள்ள ஒரு ஆடம்பர கார் நிறுத்துமிடத்தில் (conciergerie) சனிக்கிழமை இரவு பெரிய திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. சுமார் பதினைந்து பேர் கொண்ட குழு பார்க்கிங்கிற்குள் நுழைந்து 17 ஆடம்பர கார்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திருடர்கள் முதலில் பாதசாரி நுழைவு கதவை உடைத்து, பின்னர் வாகனங்கள் வைக்கப்பட்டிருந்த தளத்திற்குச் சென்றனர். அங்கிருந்த அலுவலகங்களையும் உடைத்து, கார் சாவிகள் மற்றும் பதிவு ஆவணங்களை கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திருடப்பட்ட வாகனங்களில் Ferrari, Aston Martin, Lamborghini போன்ற உயர்தர கார்கள் இருந்தன. “இவை மிகவும் அபூர்வமான மற்றும் விலையுயர்ந்த வாகனங்கள்,” என்று தனது Ferrari-யை இழந்த ஒருவர் தெரிவித்தார். காப்பீடு இருந்தாலும் இழப்பீடு குறித்து கவலை இருப்பதாகவும் கூறினார்.
இந்த சம்பவத்தை கொள்ளை தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. திருடப்பட்ட Renault Captur கார் ஒன்றை காவல்துறை கண்டுபிடித்து, அதில் இருந்த நான்கு பேரை கைது செய்துள்ளது. மேலும் ஒரு வாகனம் Villejuif பகுதியில் காலியாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan