Paristamil Navigation Paristamil advert login

400 ஆண்டுகளுக்கு பிறகு இருளப்போகும் பூமி

 400 ஆண்டுகளுக்கு பிறகு இருளப்போகும் பூமி

20 சித்திரை 2023 வியாழன் 08:08 | பார்வைகள் : 16110


400 ஆண்டுகளுக்கு பின்னர் பூமி இருளப்போகப்போகிறது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
 
நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) என்னும் ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு நிர்வகிக்கிறது.
 
நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சிகளில் எதிர்காலத்துக்கான முன்னோடியாக இருந்து வருகிறது.
 
இந்நிலையில், 400 வருடங்களுக்கு பின் இன்று சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
 
400 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ‘நிங்கலோ’ சூரிய கிரகணம் இன்று (ஏப்ரல் 20) நிகழ உள்ளது.
 
இந்தியாவில் இந்த நிகழ்வை காண முடியாது. அவுஸ்திரேலியவில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
 
அதாவது 62 வினாடிகளுக்கு சூரியன் பூமியை மறைக்கப்படும் காட்சி தெரியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.