Paristamil Navigation Paristamil advert login

Chloé கொலை — 14 வயது சிறுமியின் இறுதிச்சடங்கு இன்று வெள்ளிக்கிழமை!

Chloé கொலை — 14 வயது சிறுமியின் இறுதிச்சடங்கு இன்று வெள்ளிக்கிழமை!

15 வைகாசி 2026 வெள்ளி 11:25 | பார்வைகள் : 273


14 வயது கொலேஜ் மாணவி Chloé,மே 6 அன்று கொலேஜ் செல்லும் வழியில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

அவருக்கான இறுதி அஞ்சலி இன்று 15 மே வெள்ளிக்கிழமை மதியம் 14h முதல், Fère‑en‑Tardenois நகரின் Sainte‑Macre தேவாலயத்தில் நடைபெறுகிறது.

நகரம் முழுவதும் துயரமும் ஒற்றுமையும்

Chloé‑வின் குடும்பத்தினர்,
Fère‑en‑Tardenois நகர மக்கள்,
அருகாமை குடியிருப்பாளர்கள் —
அனைவரும் இன்று ஒன்றுகூடி இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.

பின்னர் நகர மயானத்தில் அடக்கம் நடைபெறும்

மே 8 நினைவுநாள் நிகழ்ச்சியிலும், நகர முதல்வர் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தியிருந்தார்

கொலேஜ் முன்
→ மலர்தொகுப்புகள், மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டன
→ மாணவர்களுக்காக ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டன

மே 6 காலை  Chloé‑வின் உடல் பொது சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பல குத்துக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்

இறப்பதற்கு முன் :
→ அவர் ஒரு நெருங்கியவரை அழைத்து,
→ தாக்குதலாளியின் பெயரை கூறியதாக காவற்துறையினரின் தகவல் தெரிவித்துள்ளது

சந்தேக நபர் : 23 வயது Julien B. — காதல் தொடர்பு இருந்ததாக சந்தேகம். Chloé‑வுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணை கூறுகிறது

சம்பவம் நடந்த அதே நாளில், நகரத்திலிருந்து 25 கிமீ தூரத்தில் தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டுகள் 
→ முன்கூட்டிய திட்டத்துடன் கொலை 
→ 15 வயதிற்குக் குறைவான சிறார்மீது பாலியல் பலாத்காரம்  
→ 5 ஆண்டுக்கு மேற்பட்ட வயது வித்தியாசம் கொண்ட நபரால் செய்யப்பட்ட பாலியல் வன்முறை

அவர் ஆயுள் தண்டனை எதிர்நோக்குகிறார்.

மற்றொரு 14 வயது சிறுமியையும் மிரட்டியுள்ளார்

“நாம் சந்திக்கும் போது நீ வருந்துவாய்.
நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயா?
யாரை எதிர்கொள்கிறாய் என்று அப்போது புரியும்.”
என Chloé‑வின் 14 வயது தோழியையும்,குறுஞ்செய்தி மூலம் மிரட்டியுள்ளார்

சந்தேக நபர் :

வேலை இல்லாதவர்
பெற்றோருடன் வசிப்பவர்
2023‑ல் சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததற்காக , காவற்துறை மற்றும் நீதித்துறையால் குற்றவாளி என அறியப்பட்டவர்.